மார்கழியில்ஆரோக்கியமும், தெய்வ அருளும்
மார்கழியில் அதிகாலை குளித்து வாசலில் கோலம் போட, அற்புத ஆரோக்கியமும், தெய்வ அருளும் கிடைக்கும்.. . மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி . அதனால்தான், ‘ மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் " மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம் " என்று சொல்கிறார். மார்கழி முப்பது நாட்களும் பாவை நோம்பு விரதம் இருந்துதான் ஆண்டாள், பெருமாளுடன் இணைந்து கொண்டாள். அவள் அணிந்து அழகு பார்த்து தந்த பூ மாலையை பெருமாள் ஆனந்தமாக அணிந்துகொண்டார். இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் அம்மனுக்கு சாற்றி பூஜை செய்த மலர்மாலை ஆகாய விமானம் மூலம் திருமலைக்கு கொண்டுவரப்பட்டு, திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்க படுகிறது. இதிலிருந்தே அந்த மாதத்தின் பெருமையையும், பாவை நோம்பின் பெருமையையும் உணரலாம். எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என இந்த மாதம் பிரார்த்திக்கப்படுகிறது. ...