ஆடி அமாவாசை அன்று இதையெல்லாம் செய்யக்கூடாது
ஆடி அமாவாசை அன்று இதையெல்லாம் செய்யக்கூடாது
ஆடி அமாவாசை அன்று வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது. அப்படி உணவளிப்பதாக இருந்தால் பகல் 12 மணிக்கு பிறகு தான் உணவளிக்க வேண்டும்.
ஆடி அமாவாசை அன்று வாசலில் கோலமிடக் கூடாது.
* ஆடி அமாவாசை அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்யவோ, சமையல் அறையை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்யவோ கூடாது.
* காலையில் நீண்ட நேரம் தூங்கக் கூடாது. காலை 5 முதல் 6 மணிக்குள்ளாக எழுந்து, வீட்டில் உள்ள அனைவரும் குளித்து விட வேண்டும்.
நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தாலும், வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது. பூஜை அறையில் விளக்கேற்றுவதுடன், தனியாக முன்னோர்கள் படத்திற்கு முன் ஒரு அகல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
* முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.
* வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது. அப்படி உணவளிப்பதாக இருந்தால் பகல் 12 மணிக்கு பிறகு தான் உணவளிக்க வேண்டும்.
முன்னோர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையாக போடக் கூடாது. இரண்டு இலைகள் போட்டு தான் படையல் இட வேண்டும்.
* பித்ருக்கள் போட்டோக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக வைக்கக் கூடாது. ஒரே இடத்தில் வைத்தே படையல் போட வேண்டும்.
* காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையல் இட வேண்டும். அதற்கு முன்பாக படையல் இட கூடாது.
* ஆடி அமாவாசை அன்று நகம் வெட்டக் கூடாது.
* பெண்கள் தலையை விரித்து போட்டபடி இருக்கக் கூடாது.
* நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது.
* பெண்கள் குளித்து விட்டுதான் சமையல் செய்ய வேண்டும். குளிக்காமல் சமையல் அறைக்குள் செல்லக் கூடாது.
Comments
Post a Comment