பன்னீர் குடைமிளகாய் கிரேவி

பன்னீர் குடைமிளகாய் கிரேவி செய்வது எப்படி



தேவையான பொருட்கள்

 ▢1 பாக்கெட் பன்னீர் 

▢2 பெரிய வெங்காயம் 

▢2 தக்காளி 

▢2 பச்சை மிளகாய்

 ▢1 குடைமிளகாய் 

▢1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் 

▢1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 

▢1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 

▢1/4 கரம் ஃப்ரெஷ் க்ரீம் 

▢1 டேபிள் ஸ்பூன் பட்டர்

 ▢1/2 டீஸ்பூன் சீரகம் 

▢1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

 ▢2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்

 ▢1 பிரியாணி இலை 

▢உப்பு தேவையான அளவு 

செய்முறை

 ▢ முதலில் பன்னீரை துண்டுகளாக நறுக்கி அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்து ஊற வைத்து கொள்ளவும். 

▢ பின் வெங்காயம்‌ மற்றும் தக்காளியை ஒரு‌ மிக்ஸி ஜாரில் சேர்த்து தனித்தனியாக விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

 ▢ ஒரு கடாயை அடுப்பில் பட்டர் சேர்த்து உருகியதும் சீரகம், பட்டை, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். 

▢ பின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மூடி வைத்து பச்சை வாசனை போக வதக்கவும்.

 ▢ இது சிறிது கெட்டியானதும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்து, பின் பன்னீர் கேப்ஸிகம் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.

 ▢  பன்னீர் கேப்ஸிகம் மசாலா தயார்.

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி